Saturday, February 03, 2007

பொறுமை இல்லையா?

பொறுமை இல்லையா?

என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறாய்
பொறுமை இல்லையா
என்றேன் நான்..

என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறேன்
பொறுமை எதற்கு
என்றாய் நீ..
______________________________________________
உயிரே நீதானடா
ஐ லவ் யூ என்றான்
நன்றி என்றேன்
அடுத்தமுறை சொன்னான்
அடடா என்றேன்
மீண்டும் சொன்னான்
அடப்போடா என்றேன்
நான் உயிரையே
வைத்திருக்க
இவன் நேசம்
வைக்கிறானாம்.
___________________________________________
என்னை எங்கே?

என்னிடம் வந்த எவனோ ஒருவன்
என் சொந்தம், என்பந்தம், என் நட்பு
என்பகை எல்லாம் ஆகி என்னவனும் ஆகி
என்னை இல்லாமல் ஆக்கிவிட்டான்.
________________________________________